பால் பக்கட்டின் விலையும் 07 ரூபாவால் உயர்வு!



இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா மற்றும் உள்நாட்டுப் பால்மா பக்கட்டுக்களின் விலை உயர்வைத் தொடர்ந்து சந்தையிலுள்ள பசும்பால் மற்றும் பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பால் விலையும் 07 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மில்க்கோ நிறுவனம் இன்று சனிக்கிழமை பகல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பால் பண்ணை விவசாயிகளின் செலவுகள் அதிகரித்திருப்பதால் லீட்டருக்கான விலையும் உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.