இந்தியாவிடம் இருந்து கடன் பெறும் அரசாங்கம்



எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு, குறிப்பாக பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த கடன் பெறப்படுவதாகவும், அந்த அதிகாரி கூறினார்.