'வழிகாட்டல்களை பின்பற்ற தவறினால் ஆபத்து'



பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதாரத்துறை வழிகாட்டல் சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற தவறினால், மீண்டும் ஆபத்து நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்துள்ளார்.

நமது மக்கள் அறிவு மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கு புதிதாக அது தொடர்பில் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.