இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் கடல்வழி போராட்டம்



இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் இன்று (17) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது

இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை நடத்தப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.