வாகன சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு


நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களையே இவ்வாறு இழுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.