டப்பென வெடித்த அடுப்பு : டக்கென அணைத்த பெண்



வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில், நேற்று (06) இரவு, பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது, எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும், குறித்த பெண் இருந்தமையால், உடனடியாக அடுப்பை அணைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

வெடிப்பின் போது, எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது. இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், இது தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.