பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை இலங்கை அறிவித்தது



பாகிஸ்தானில் சித்திரவதைக்குட்படுத்தி கொடூரமாக அடித்து எரியூட்டி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இழப்பீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 11 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரியந்த குமார வழங்கிய பங்களிப்பினை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.