ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு



ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.

இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வாழ்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எல்.ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் பாலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.