உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்


உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நேற்று 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை விரைவில் மானியம் பெற உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய பெற்றோல் மற்றும் உர நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் நிதியைப் பெறுவதற்கும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் இலங்கைத் தூதுவர்களுடன் கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.