யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பதவி உயர்வு


யுத்த வெற்றி தினத்தை (மே 18) முன்னிட்டு அடுத்த நிலைக்கு தகுதியுடைய 396 அதிகாரிகள் மற்றும் 8,110 சிப்பாயிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை கடற்படையின் 74 அதிகாரிகள் மற்றும் 2,010 சிப்பாயிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை வான் படையின் 450 அதிகாரிகள் மற்றும் 3,361 சிப்பாயிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது