கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு


எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொரளை – மருதானை வீதி, ஆனந்தா கல்லூரிக்கு முன்னால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி போக்குவரத்து சுகததாஸ உள்ளக அரங்குக்கு முன்னால் தடைப்பட்டுள்ளது.

இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது