சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 54 பேர் கைது!


மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணமாக பலர் இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.