மனிதாபிமான வர்த்தகர்கள் - மட்டக்களப்பில் பழைய விலைக்கே எரிபொருட்களை மக்களுக்கு வழங்கியிருந்த எரிபொருள் நிரப்பு நிலையம்


கொள்ளை இலாபம் பெறும் வர்த்தகர்களின் மத்தியில் மக்களின் துன்பம் துயரங்களை புரிந்து கொண்டு மனிதாபிமானமிக்கவர்களாக நடந்து கொள்ளும் வர்த்தகர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள்.  IOC நிறுவனம் தமது எரிபொருட்களுக்கு விலையை அதிகரித்திருந்த போதும் சில எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்கள் பழைய விலைக்கே எரிபொருட்களை மக்களுக்கு வழங்கியிருந்தனர். 

இவர்களில் மட்டக்களப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரான மு.செல்வராஜா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அன்பான வர்த்தகர்களே! இக்கட்டான இந்நிலையில் மக்களின் துயரத்தினைப் புரிந்து கொண்டு இவர்கள் போன்று செயற்படுங்கள்.