எரிபொருளுக்கு ‘டோக்கன்’ விநியோகம் கல்முனையில் ஆரம்பம் !


(எம்.என்.எம்.அப்ராஸ்)

நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி கல்முனை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்திருந்தவர்களை இராணுவத்தினரால்
பதிவு செய்யப்பட்டடு எரிபொருளுக்கான
‘ டோக்கன்’ வழங்கப்பட்டது.

நேற்று(26) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடளாவிய ரீதியில் டோக்கன்’ முறையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.