எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும் – ஜனக ரத்நாயக்க


அந்நியச் செலாவணி வருவாயில் 60% க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.