நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு !



இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னர் திட்டமிட்டவாறு நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.