வீட்டில் உள்ள பொருட்களை விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் கைது !


யாழ். அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் மருந்து ஏற்றும் ஊசி தேசிக்காய் என்பவற்றுடன் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது .

அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த இளைஞன் போதைக்கு அடிமையான நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை திருடி விற்று போதைப்பொருட்களை வாங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞனை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.