மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் விளாவட்டவான் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா !


(எஸ். சதீஸ் )

மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் விளாவட்டவான் ஸ்ரீ கணேஷா அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா வெள்ளிக்கிழமை 2023-01-27 ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் சண்முகராஜா, மற்றும் பிரதேச கலாசார உத்தியோகஸ்தர்கள், ஆலய பிரதம குருக்கள், அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர்கள் மாணவர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பரத தர்சனம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் விளாவட்டவானில் இடம் பெற்ற இப்பொங்கல் விழாவில் சுமார் 140 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் கலை கலாச்சார பவனியுடன் பொங்கல் , சிறப்பு பூசைகள், சமய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. 

தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் "உன் எதிர் காலம் உன் கையில்" எனும் நூலும் அறநெறி ஆசிரியர்களுக்கு "வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே" எனும் நூலும் பரத தர்சனம் அறக்கட்டளையினால் வழங்கப்பட்டது.