ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !



நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் நேற்று (ஜன 27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நுகேகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து 12 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு நுகேகொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 10 கிராம் 870 மில்லிகிராம் மற்றும் 10 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் உடுகமுல்ல மற்றும் நுகேகொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 34 மற்றும் 55 வயதுடைய மஹரகம மற்றும் நுகேகொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.