நிலத்தகராறு காரணமாக தம்பதியர் வெட்டிக்கொலை!



அம்பலாந்தொட்ட பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் தம்பதியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அம்பலாந்தொட்டை பெலிகலகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து கோடரி மற்றும் கத்தியால் தம்பதியை தாக்கி இரட்டைக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய கணவன் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்டகால நிலத்தகராறு காரணமாக இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.