மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு (11) பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலுள்ள குறித்த பெண்ணின் வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் எனவும் நீண்ட காலமாக வீட்டில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.