“பசிலை மீண்டும் அழைத்து வாருங்கள்” - நாமலுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால்


பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, “முடிந்தால் பசில் ராஜபக்ஸவை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வாருங்கள்” என எஸ்.எல்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு சவால் விடுத்துள்ளார்.

பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என முன்பு கூறப்பட்டதாக தெரிவித்தார்.

அண்மைய நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட அவர், ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், “ஊழல் நிர்வாகம்” என அவர் குறிப்பிட்ட ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.