
அமெரிக்கா, ஈரான் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் ஈரானை தொடர்புடைய சமாதான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ஈரான் மற்றும் சம்பந்தப்பட்ட பிற நாடுகளுக்கிடையிலான இறுதி இணக்கப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த கலந்துரையாடல் “மிகச் சிறப்பாக” அமைந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையில், Reuters மற்றும் AP உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் அதிகாரிகள் இந்த முன்மொழிவை “மேலும் விவாதம் தேவைப்படும் கட்டமைப்பு ஒப்பந்தம்” என எச்சரிக்கையுடன் விவரித்துள்ளனர்.





.jpeg)
.jpeg)





