மட்டக்களப்பு மாவட்டத்தில்அதிசிறப்பு சித்திபெற்ற மாணவி

நடைபெற்று முடிந்த க.பொ.த. உயதரப் பரீட்சையிலே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கலைப்பிரிவில் அதிசிறப்பு சித்திபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் மட்/வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற ரி. தேவப்பிரியா என்ற மாணவியே மேற்படி சாதனையினை புரிந்துள்ளார். இவர் கடந்த உயர்தரப் பரீட்சையிலே கலைப்பிரிவில் தோற்றி மாகாண மட்டத்திலே முதலாவது இடத்தினையும் அகில இலங்கைரீதியில் 13வது இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு திராய்மடு(சுவிஸ் கிராமத்திலே வசித்து வரும் மிகவும் வறுமைக்குடும்பத்தினைச் சோந்த ஓர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

..!!! வாழ்த்துக்கள் ..!!