மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியில் பேழை சஞ்சிகை வெளியீட்டு விழா

கிழக்கு மாகாணத்தின் பிரபல பெண்கள் கல்லூரியான மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர மகளிர் கல்லூரி மாணவர்களால் வெளியிடப்பட்ட பேழை சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று காலை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி க.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் தேசிய ஆலோசகருமான செல்வி தங்கேஸ்வரி கதிர்காமன் கலந்து கொண்டார்.

ஓய்வுபெற்ற அதிபர் திருமதி இந்திராணி புஸ்பரஜா சஞ்சிகை நயவுரை நிகழ்த்தினார். முக்கிய பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்.