மட்டக்களப்பில் சிறுவர் தின மாவட்ட நிகழ்வுகள்


(சிவம்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்காவும் இணைந்து நடாத்திய சிறுவர் தின மாவட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (01) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மாவட்டத்திலுள்ள சிறுவர்களின் உரிமைகள், துஸ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் , சிறுவர்களின் பாதுகாப்பு பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

விசேட தேவையுடைய மாணவர்களின்  ஓவியம் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டுதல்  உட்பட பல்வேறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பிரதியமைச்சர்களான எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், வினாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், லேதிக அரசாங்க அதிபர் எஸ். குரிதரன், உதவி அரசாங்க அதிபர்; எஸ். ரங்கநாதன், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.