(சிவகுமார் )
விளையாட்டுத்துறை மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடாத்தும் 44வது தேசிய விளையாட்டு விழா கல்லடி கடற்கரையில் (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது
இப்போட்டிகள் ஜூன் 1ஆம் 2 ஆம் 3 ஆம் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் .
இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் கபடி வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்
பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டார்
நிகழ்வில் அதிதிகளாக இலங்கை கபடி சம்மேளன செயலாளர் அனுர பத்திரன ,கிழக்கு மாகான விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என் மணிவண்ணன் ,பிரதி முதல்வர் ,கந்தசாமி சத்தியசீலன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் ,மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி ,மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
இறுதி நிகழ்வுகள் நாளை 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது