வெருகல் பிரதேசத்தில் படகுகள் தீக்கிரை!



வெருகல் பிரதேசசபைக்கு உட்பட்ட சித்தந்திட்டி எனும் பகுதியில் 35 படகுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கங்கை ஆற்றில் மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்படும் குறித்த படகுகளே இன்று அதிகாலை 1.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

26 பேருக்குச் சொந்தமான குறித்த படகுகள் அனைத்தும் டயர்கள் மற்றும் பெற்றோல் என்பனவற்றைக் கொண்டு எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸாரது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெருகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த படகுகள் அனைத்தும் தலா 50,000 ரூபாய் பெறுமதியானது என்றும் இதனை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் புரிந்து வரும் தொழிலாளிகள் இதன்காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.