மட்டக்களப்பிற்கு வருகைதந்த இந்திய உயர்ஸ்தானிகர்


(விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் இன்று வெள்ளிக்கிழமை (14.9.2018) மாலை 3.30 மணியளவில் விஷேட விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு நகரில் காந்தி பூங்காவிற்கு வருகைதந்த இந்திய உயர்ஸ்தானிகர் தரஜித் சிங் சது அவர்களை மலர்மாலை அணிவித்து வரவேற்பதையும், காந்தி சிலைக்கு உயர்ஸ்தானிகர் மலர்மாலை அணிவித்தும், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன்,மற்றும் பிரதேச செயலாளர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள், மாவட்ட உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.