மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடப் பகுதியிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக இன்று (வெள்ளிக்கிழமை ) காலை கண்டெடுக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு- கூழாவடி திஸ்ஸவீர சிங்கம் சதுர்க்கத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு- கூழாவடி திஸ்ஸவீர சிங்கம் சதுர்க்கத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.