தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும்


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மகளிர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது .

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட பொருட்களின் கண்காட்சியும் , மட்டக்களப்பு ஜெயந்திபுராம் வாசிகசாலை கட்டத்தில் நேற்று  நடைபெற்றது .

மண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை , சிரேஷ்ட தையல் போதனாசிரியர் திருமதி என் . ரவிச்சந்திரன் ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .மோகன் பிறேம்குமார் ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் , கிராம அபிவிருத்தி உத்தியோக்கத்தார் மற்றும் ஜெயந்திபுரம் ,வீச்சுக்கல்முனை ,மாஞ்சந்தொடுவாய் , கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் 2018 ,2019 பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனர் .