பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை

(சித்தா)
இன்று பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழாவின் சரஸ்வதிதேவியின் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் கலை நிகழ்வுகளும் சிறப்புச் சமய சொற்பொழிவுகளும் இடம்பெற்றதுடன் சரஸ்வதிதேவியின் சிறப்பு வழிபாடும் மிகவும் பக்தி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பூஜை வழிபாட்டினை ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய சி.யோகராசா அவர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் முன்னெடுத்திருந்தார்.