(LEON)
2019 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றது
இம்முறை நாடளாவிய ரீதியில் இப்பரீட்சைக்கு பாடசாலை மட்டத்தில் 04 இலட்சத்து 33 ஆயிரத்தி 50 பாடசாலை மாணவர்களும், 02 இலட்சத்து 83 ஆயிரத்தி 958 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியுள்ளனர்.
மொத்தமாக 07 இலட்சத்து 17 ஆயிரத்தி 08 பரீட்சாத்திகள் 2019 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 4987 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 554 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறுகின்றது .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு ஆகிய 05 வலயத்தில் 160 பரீட்சை நிலையங்கலிலும் 14 இணைப்பு பரீட்சை நிலையங்கலிலும் இப் பரீட்சைகள் நடைபெறுகின்றது.
இப்பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 கல்வி வலயத்தில் 10,189 பாடசாலை மாணவர்களும், 15,002 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு 25 191 பரீட்சாத்திகள் தோற்றுகின்றனர் .
காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையிலும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .