தமது 35 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். உதவிக்கல்விப் பணிப்பாளர; ஜனாப் ஐ.எம்.இப்றாஹிம்.


(சித்தா)                                              மட்டக்களப்பு பாலமுனையின் முதல் பட்டதாரியும் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஜனாப் ஐ.எம்.இப்றாஹிம் இன்று (13.01.2020) தமது 35 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.இவர் கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயம்,உடப்பு தமிழ் மகா வித்தியாலயம்,ஆகியவற்றில் ஆசிரியராகவும் பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் ஆசிரியரராகவும் அதிபராகவும் கடமையாற்றியவர்.  பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் இவரது அயராத முயற்சியினால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி வலயம் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமை ஆற்றி ஓய்வு பெற்றுள்ளார். 
மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆரம்பக்கல்வி அபிவிருத்தி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை அதிகரித்தலில் மிகச்சிறப்பாக பங்காற்றியுள்ளார்.கடந்த காலங்களில் 3 வருடங்கள; மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2019 ல் 413 (14%) மாணவர்கள் தகைமை பெற்றதும்  குறிப்பிடத்தக்கது.
இவர் கல்வி அபிவிருத்தியுடன் மட்டுமல்லாமல் சமய சமூக விடயங்களிலும் ஈடுபாடு உடையவர; காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், ஆரையம்பதி மத்திஸ்த சபை ஆகியவற்றின் உறுப்பினரும் பாலமுனை மீரா ஜும்மாப் பள்ளிவாயல் மற்றும் மத்ரதுல்  றஹ்மானியா ஆகியவற்றின் உப தலைவராகவும் இருந்து தமது ஊரையும் சமூகத்தையும் வழிநடாத்திச் செல்கின்றார்.
இவ்வாறு கல்வி சமய சமூக விடயங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமுகசேவையாளனாகவும் திகழ்ந்து வருகின்றார்  
இவர் ஆரம்பக்கல்வி தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக 2011 சிங்கப்பூர் சென்றமை குறிப்பிடத்தக்கது.