மட்டக்களப்பில் வீதி விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் பலி !


(எஸ்.எம்.எம்.முர்ஷித்) (கனகராசா சரவணன்) (எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி வாகரை பிரதேசத்தில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் 45 வயதுடைய எஸ்.ஏ.ரபீல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் இருவர் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தபோது வாகரை இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் வாகரையில் இருந்து வாழசை;சேளை நோக்குp சென்ற உழவு இயந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து சென்றவரே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வாழசை;சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதில் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த 33 வயதுடைய கி.லக்மன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதுடன் உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்