மக்களிடம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிடும் சுகாதாரத்துறை !

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நோயாளியும் இலங்கையில்  கண்டறியப்படவில்லை
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 



இந்த நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், கடந்த ஜனவரி மாதம் குணப்படுத்தப்பட்ட சீனப் பெண் உள்ளிட்ட மூவர் இதுவரை குணப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், 99 பேர் தொடர்ச்சியாக சிகிச்சைப்பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.