யாழ்.தாவடி பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த 4 வயதான சிறுமி இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் இரத்த மாதிரிகளை இன்று மாலையே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து அறிவிக்க முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.