மடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2074 ஆக அதிகரித்துள்ளது.

மடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1885 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 879 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.