[NR]
உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (Skills For Inclusive Growth) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் COVID -19 சர்வதேச தொற்று தயார்படுத்தல் பயிற்சியினை (TOT for the Pandemic Preparedness Course) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 2020.08.21 ம் திகதி வெள்ளிக்கிழமை பாசிக்குடா "அமையா ஹோட்டலில் " நடைபெற்றது. இந்நிகழ்வு அரச அதிகாரிகள், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் (SLTDA), ஏனைய முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 60ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் விருந்தோம்பல் துறையினை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இடர் முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் போன்றோருக்கு எவ்வாறு தொடர்புகள், வெளிப்பாடுகளை தவிர்ப்பது மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நடைமுறை(practical) வழிமுறையிலான ஐந்து(5) நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டதுடன் விருத்தினர்களிடம், ஊழியர்களிடம், வழங்குநர்களிடம் மற்றும் ஏனையவர்களிடம் எவ்வாறு தேவையற்ற தொடர்புகளை தவிர்த்து, சமூக இடைவெளியினை பேணுதல் தொடர்பான வழிகாட்டலும் வழங்கப்பட்டது.
மேலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் (SLTDA), சுகாதார அமைச்சு (MOHSL), சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவகம் (IHP) , உலக சுகாதார அமைப்பு(WHO) ஆகியவற்றினால் பரிந்துரைக்கப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகாரணகள்(PPE), தூய்மைப்படுத்தல் தொடர்பான சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்துவதன் ஊடாகவும் இவ் அமைப்புக்களுடன் ஒரு முறைமையாக இணைந்து செயற்படுவதன் மூலமும் ஆபத்துகளை குறைபத்தற்கும் மற்றும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் தொடர்பாக ஆலோசனை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.ஸ்ரீகாந்த், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் சுற்றுலா திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுடாளர் உறவு பிரிவிற்கான பணிப்பாளர் டாக்டர். பிரசாத் ஜெயசூரிய, மட்டக்களப்பு பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் டாக்டர். மயூரன், மற்றும் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை வைத்திய கண்காணிப்பாளர் டாக்டர். தயாளினி சசிக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.