20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(15) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குறித்த குழுவின் தலைவராக அமைச்சரவை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

20ஆவது திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட புதிதாக உள்ளடக்கப்பட வேண்டிய மற்றும் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு பிரதமரினால் இக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.