வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்


வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேகசன் தலைமையில் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர் களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. 
இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளன.  அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.