இலங்கையை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் உரம்



அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட சேதன பொட்டாசியம் குளோரைட் உரம் இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி 30,000 மெட்ரிக் தொன் சேதன பொட்டாசியம் குளோரைட் உரம், கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.