கொக்கட்டிச்சோலை ஆலயத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு



கொக்கட்டிச்சோலையில் ஆலயம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சடலமாக மீட்கப்பட்டவர் அம்பலந்துறையை சேர்ந்த 47 வயதானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை – கச்சேனை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குள் இருந்தே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்து பாகத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

வீட்டில் ஏற்பட்ட முறுகல் நிலையினால், கோயிலில் உறங்கச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நபரே கோயிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.