முன்னாள் அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன முறைகேடு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வாக்கு மூலம் வழங்க வந்த வேளையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.