' முதலுதவி '


சடுதியாக நோயுற்ற ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்களை  முதலுதவி எனலாம்.

உதாரணம்: சடுதியாக ஒருவர் விபத்துக்குள்ளானால் / மயக்கமுற்றால்  அவரது உயிரைக் காப்பாற்ற வழங்கும் சிகிச்சை முறையாகும். நோயுற்றவரை உடனடியாகக் கவனித்து, காரணத்தை அறிந்துமுறைப்படி சிகிச்சை அளித்து பின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நோயுற்றவருக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமுன் வழங்கப்படுவதே முதலுதவியாகும்.

என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு உடனடியாக முதலுதவி தேவைப்படும் போது அவசரப்படக்கூடாது. அமைதி தேவை காற்றை உள்ளிழுத்து மூச்செடுக்கவும் படிமுறையாக சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

1. நோயுற்றவரைக் கவனியுங்கள்.
2. அவரது மூச்சுவிடும் ஆற்றலை செவ்வை பார்க்கவும்.
3. இரத்தம் வெளியேறாதவாறு தடை செய்யவும்.
4. வேறு உதவிகளைப் பெறவும்.

நோயுற்றவர் அல்லது காயப்பட்டவரை வாகன நெருக்கடியிருந்தால் மட்டும் அவ்விடத்தை விட்டு அசைக்கலாம். மெதுவாக அவரைத் தூக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகெலும்பு அல்லது எலும்புகள் உடைந்திருந்தால் தூக்குதலைத் தவிர்க்க வேண்டும்.

கடலில், ஆற்றில், நீரில் ஒருவர் மூழ்கிவிட்டால் உங்களுக்கு நீந்தத் தெரியாதவிடத்து நீரில் குதித்துவிடக் கூடாது.

மூச்சு விடுதலைச் செவ்வை பார்த்து செயற்கைச் சுவாசம் அளிக்க வேண்டும் சிறிது நேரம் ஒக்சிசன் இல்லாவிட்டால் மூளையப் பாதிக்கும் .  வாய்க்குள்ளும், தொண்டையிலும் ஏதாவது பொருள் இருந்து மூச்சடைக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும். (வாயில் வாயை வைத்து காற்றை ஊதவேண்டும்.) நோயுற்றவரை – எலும்புகள் உடையாதிருந்தால் நிமித்திப் புரட்ட வேண்டும். நெஞ்சு சுவாசிப்பதால் மேலெழுந்து உயர்ந்து பதிகிறதா எனப் பார்க்க வேண்டும். காற்று உள்ளேயும், வெளியேயும் செல்கிறதா என்பதை வைத்து ஊத வேண்டும்.

1-8 வயதுக் குநை;தையின் மூக்கு வாய் இரண்டின் ஊடாகவும் இப்படிச் செய்தால் நலம். ஒருமுறை ஊதியதும் நிறுத்தி மூன்றுவரை எண்ணுங்கள். பின் இன்னுமொரு முறை செய்யவும். இடைவிட்டுச் செய்வதால் குழந்தையின் நுரையீரல் பாதிப்படையாது.

யாருக்குத் தேவை?

மனித உடல் பல உறுப்புக்களைக் கொண்டது. அந்த உறுப்புக்களைச் சடுதியாக ஏதும் தாக்கும் போது சடுதியாக ஒரு தாக்கம் - விபத்து ஏற்படுகிறது. உடனடியாக உடல் துவண்டுவிடுகிறது. அந்தத் தாக்கத்தினை ஈடுசெய்யக் கூடிய நடவடிக்கைகள் தேவை. அந்நடவடிக்கையினால் உடல் மீண்டும் வழமைக்கு திரும்பிவிடும்.

இவ்வாறான விபத்துக்களை எவ்விடத்தும் , எப்போதும் யாருக்கும் வரலாம். இதற்கான காரணங்கள்.

1. வாகன நெருக்கடிகள்
2. அவசரமான இயந்திர வாழ்க்கை
3. சுற்றுப்புச் சூழல் பாதிப்படைதல்
4. கவனமின்மையும், கரிசனையின்மையும்
5. வருமுன் காக்கும் அறிவும், ஆற்றலும், பொறுப்பும் இன்மை
6. சமூக மனவெழுச்சி அழுத்தங்களும், விரக்தியும்
7. மனித நேயமின்மையும் , விலங்குணர்வும்

மக்கள் அல்லது சனப்பெருக்கம் பல்கிப் பெருகுவதால் வாழ்க்கை வசதிகள்குறைகின்றன. தேவைகள் அதிகரிக்கின்றன. அடிப்படைவசதிகள் பற்றாக்குறை அடிப்படை வசதிகளான உணவு, உறைவிடம், உடை ஆகியவையோடு நீர்ப்பற்றாக்குறை இவை சூழலைப் பாதிக்கும், சூழல் சமநிலைத்தன்மை கெடும், நோய் பரவும், திடீரென மனித உடல் தாக்கப்படும். வாகன விபத்துக்கள், மனித நடத்தைத் தாக்கத்தினால் சச்சரவுகள் விபத்துக்களைத் தோற்றுவிக்கின்றன. வசதிகளற்ற, பாதுகாப்பற்ற இடங்களில் குடியிருக்கும் போது பல்வேறு பொருட்களால் , சாதனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

  01. சாக்கடையில் விழுந்து மூச்சுத்திணறல்.
  02. போசாக்கின்மையால் மயக்கம்.
  03. கிருமிநாசினிகளால் - அவற்றைக் குடிப்பதால்.
  04. போதைப்பொருட்கள் / கூரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள்.
  05. நாட்டின் அரசியல் பொருளாதார ஆட்சி முறைமை.

சாதாரணமாக முதலுதவி தேவைப்படும்.

01. மயக்கம் திடீரென ஏற்படுதல்
02. மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறல்
03. தீப்பற்றிக் கொள்ளல் / தீக்காயப்படல்
04. இயற்கை அனர்த்தங்களால் - பல்வேறு சந்தர்ப்பங்களில்
05. நஞ்சு – நஞ்சுத் திராவகம் - நஞ்சருந்துதல்
06. விழுவதால் எலும்புடைதல், காயங்கள் ஏற்படல்.
07. பூச்சிகள், தேள் கொட்டல் - பாம்பு கடித்தல்
08. தசைநார் பிறல்தல்
09. தோண்டை அடைத்தல் / மூச்சுத்திணறல்
10. நீரில் மூழ்கி அமிழ்தல்
இவற்றை வருமுன் காக்கும் திறனால் தவிர்த்துக் கொள்ளலாம். தற்பாதுகாப்பும், சூழல் பாதுகாப்பும் பற்றிய அறிவும் செயற்றிறனும் தேவை. தற்செயலாக விபத்து ஏற்பட்டாலும் முதல் சிகிச்சை மூலம் உயிரைக்காப்பாற்றலாம். முதலுதவிப் பெட்டிகள் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் வைத்தல் வேண்டும். யாவருக்கும் முதல் உதவிப் பயிற்சி தெரிந்திருந்தால் நாட்டுக்கு நன்மை பயக்கும். பல உயிர்களைக் காக்க முடியும்.


யேசுஐயா டிலானி
உதவி விரிவுரையாளர்,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்