இலங்கையின் எழுபதாவது சுதந்திர தின வைபவம் வெருகல் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தலைமையில் சிறப்பாக நினைவு கூரப்பட்டது.
வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் இலங்கைத் துறை முகத்துவாரம் சமுத்திர கிரி விகாரை யில் விசேட பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் சிரமதான நிகழ்வுகளும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பொதுமக்களுக்கான எமது சேவைகள் உரிய சந்தர்ப்பத்தில் எதுவித தடைகளுமின்றி வழங்கப்படுவதையும்இ வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை சுபீட்சமடைய எமது சேவை அர்ப்பணிக்கப்பட வேண்டுமென ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் உறுதிப்படுத்திக் கொள்வதை இச் சுதந்திர தினம் செய்தியாக நாம் ஒவ்வொரு ஊழியர்களும் பிரமாணமாக இஅதன்போது ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கோ. பவதாரிணிஇ உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ நவநிதன்இ ஈச்சிலம்பற்று பொலிஸ்நிலைய பொறுப்பதிகார் உட்பட கிராம சேவையாளர்கள்இசமுர்த்தி முகாமையாளர்கள்இ உட்பட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்..
.