அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு கிண்ணியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்தார்.

இதற்கமைய, இன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.