
(வரதன்)
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் வேடன்பவளின் 163வது பிறந்த தினத்தை யொட்டி மட்டக்களப்பில் இன்று காலை 10 மணியளவில் சாரணியர்களின் ஊர்வலம் இடம் பெற்றது. இந்த ஊர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வெபர் மைதானத்தை சென்றடைந்தது. இதன் போது மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னாலுள்ள சாரணியர் உருவச்சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் வி.பிரதீபன் அவர்களால் சாரணியர் பட்டி அணிவிக்கப்பட்டது.
சாரணியர் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆiணாயாளர் இ.கிறிஸ்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பட்டிருப்பு கல்வி வலய மாவட்ட உதவி ஆiணாயாளர் ஆ.புட்கரன் பாடசாலை அதிபர்;கள் சாரணியர் தலைவர்கள் மட்டு கல்வி வலயக் சாரணிய மாணவர்கள் 300 பேர் இதில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து இந்த சாரணியர்களின் ஊர்வலம் ஆரம்பமானது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இதன் பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த ஊர்வலத்தின் போது சாரணியரின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் போன்றவைகள் எழுதப்பட்ட சுலோகங்களையும் சாரணர் இயக்க ஸ்தாபகர் நிகழ்வில் மாணவர்கள் ஏந்திசென்றனர்.







