இணைய வழி கற்றல் வசதிகள் அற்ற மகிழூர்முனை சக்தி வித்தியாலய மாணவர்களுக்கு வினாத்தாள் செயலட்டைகள் விநியோகம் !


தற்போதைய சூழ்நிலையில் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றது வருகின்றது. இணைய வழி கற்றல் செயற்பாடுகளுக்குரிய எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற கஷ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மட்/பட்/மகிழூர்முனை சக்தி வித்தியால மாணவர்கள் தொடர் கல்வி நடவடிக்கைகளை இழந்து கஷ்டப்பட்டனர்.


இச் சந்தர்ப்பத்தில் அதிபர் திரு தேவராஜா அவர்களின் விஷேட நடவடிக்கையாக தரம்-01 தொடக்கம் தரம் -11 வரையான மாணவர்களுக்கு உரிய வினாத்தாள் செயலட்டைகள் அடங்கிய கோவைகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் சமுக இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததுடன் அதிபர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.