PCR பரிசோதனை மேற்கொண்ட ஒன்பது அதிகாரிகளுக்கு கொரோனா


கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட கொழும்பு மாநகர சபையின் ஒன்பது அதிகாரிகளும் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கொழும்பு மாநகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த ஒக்டோபர் 18 முதல் நேற்று வரை கொழும்பில் 5368 பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட தாகவும் அவற்றில் 937பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மொத்தம் 541 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 304 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் 191பேர் கொழும்பிலிருந்தும் 42பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும் பதிவாகியுள்ளனர்.